கோவையில் கோர விபத்து.. மயிரிழையில் உயிர் தப்பிய தொழிலதிபர்கள்!

published 1 year ago

கோவையில் கோர விபத்து.. மயிரிழையில் உயிர் தப்பிய தொழிலதிபர்கள்!

கோவை: கோவை அன்னூர் அருகே ஓடும் காரில் திடீரென ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் உட்பட இருவர் உயிர்த்தப்பினர்.

கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர் சாமுவேல். சிஎன்சி லேத் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். நேற்று மாலை சாமுவேல் தனது நண்பருடன் தனது காரில் ஈரோடு வரை சென்று விட்டு மீண்டும் கோவை திரும்பியுள்ளார். காரை சாமுவேல் ஒட்டி வந்த நிலையில் அன்னூர் அருகே வந்து கொண்டிருந்த போது காரின் முன் பக்கமாக புகை வெளியேறியுள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சாமுவேல், சுதாரித்துக் கொண்டு உடனடியாக சாலையோரம் காரை நிறுத்தி விட்டு நண்பருடன் வெளியேறியுள்ளார். காரின் டேஸ் போர்டு பகுதியில் தண்ணீர் ஊற்ற முயற்சித்த போது எஞ்சினில் திடீரென தீப்பிடித்து கார் முழுவதும் மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. 

இதையடுத்து சாமுவேல் உடனடியாக அன்னூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள்  தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.மேலும் சம்பவ இடத்துக்கு வந்த அன்னூர் போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

இதன் காரணமாக அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe