அதிர்ச்சி; ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்தது தங்கம் விலை...!

published 1 year ago

அதிர்ச்சி; ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்தது தங்கம் விலை...!

கோவை: தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.200 அதிகரித்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தமிழகத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை  நிலவரத்தை இந்த செய்தியில் காணலாம்.  

புத்தாண்டு மற்றும் தொடர் விடுமுறை காரணமாக தங்கத்தின் விலையில் 31,1 ஆகிய தேதிகளில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. இதனிடையே கடந்த 10ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 அதிகரித்திருந்தது

நேற்று முன்தினம் தங்கம் விலை சரிவை சந்தித்தது. பவுனுக்கு ரூ.40 குறைந்தது. இதனிடையே நேற்று மீண்டும் விலை உயர்ந்தது. பவுனுக்கு ரூ. 80 அதிகரித்திருந்தது.

இதனிடையே இன்று மீண்டும் விலை அதிகரித்து பவுனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் 22 காரட் ஆபரண தங்கம் பவுனுக்கு ரூ.200 விலை அதிகரித்து ஒரு கிராம் ரூ. 5,845க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.46,760 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் ஆபரண தங்கம் பவுனுக்கு ரூ.168 விலை அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,788 ஆகவும், ஒரு சவரன் ரூ.38,304ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி கிராமுக்கு 50 பைசா அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.78000ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe