லிப்ட் அறுந்து விழுந்து பெண் தொழிலாளி உயிரிழப்பு...

published 1 year ago

லிப்ட் அறுந்து விழுந்து பெண் தொழிலாளி உயிரிழப்பு...

கோவை: கோவையில் ஒர்க்‌ஷாப்பில் லிப்ட் அறுந்து விழுந்து பெண் தொழிலாளி பலியானது தொடர்பாக உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கோவை மதுக்கரை ரோடு எம்ஜிஆர் நகரில் கதிர்வேல் என்பவர் எஸ்கே இன்ஜினியரிங் என்ற பெயரில் ஒர்க்‌ஷாப் நடத்தி வருகிறார். இங்கு 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். கீழ் தளம், முதல் தளம் கொண்ட இந்த ஒர்க்‌ஷாப்பில் இரும்பு பொருட்களை லிப்ட் மூலம் ஏற்றி இறக்குவது வழக்கம். இந்நிலையில், நேற்று இங்கு தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது லிப்ட்டின் இரும்பு ரோப் அறுந்து கீழே விழுந்தது. இதில் 2 பெண் தொழிலாளிகள் சிக்கி கொண்டனர். இருவரும் பலத்த காயத்துடன் வலியால் துடித்தனர். 

இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் இருவரையும் மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதனை செய்ததில், கோவை சிட்கோ எம்ஜிஆர் நகர் 3வது வீதியை சேர்ந்த லதா(45) என்பவர் உயிரிழந்தது தெரியவந்தது. மற்றொரு பெண் தொழிலாளி மதுக்கரையை சேர்ந்த குஷ்பு(34), இரண்டு கால் மற்றும் கைகளில் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சுந்தராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், உரிய பாதுகாப்பு இன்றி தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியது தெரியவந்தது. இதனையடுத்து ஒர்க்‌ஷாப் உரிமையாளர் கதிர்வேல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe