பெண் இயக்குனரிடம் ரூ. 5.50 லட்சம் கடன் வாங்கி மோசடி- 2 பேர் கைது...

published 1 year ago

பெண் இயக்குனரிடம் ரூ. 5.50 லட்சம் கடன் வாங்கி மோசடி- 2 பேர் கைது...

கோவை: ஈரோட்டை சேர்ந்த தனியார் நிறுவன பெண் இயக்குனரிடம் ரூ. 5.50 லட்சம் கடன் வாங்கி மோசடி செய்ததாக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஈரோடு பவர் ஹவுஸ் சாலையை சேர்ந்தவர் வசுந்தரா(43). தனியார் நிறுவன இயக்குனர். இவரிடம் கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியை சேர்ந்த பிரான்சிஸ் பால் அந்தோணி என்பவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரூ. 5.50 லட்சம் கடன் வாங்கியதாக தெரிகிறது. அந்த பணத்தை ஒரு மாதத்தில் திருப்பி கொடுத்து விடுவதாக தெரிவித்தார். ஆனால் 3 மாதங்கள் கடந்த பின்னரும் பிரான்சிஸ் பால் அந்தோணி பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இது குறித்து வசுந்தரா கேட்டபோது அவர் ரூ. 5.70 லட்சத்துக்கு காசோலை கொடுத்தார். 

அந்த காசோலையை வசுந்தரா வங்கியில் செலுத்தி மாற்ற முயன்றபோது, காசோலை வங்கியில் பணம் இல்லாமல் திரும்பியது. இதனைதொடர்ந்து மீண்டும் கடந்த நவம்பர் மாதம் பிரான்சிஸ் பால் அந்தோணி ரூ. 5 லட்சத்துக்கு காசோலை கொடுத்தார். அந்த காசோலையும் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பியது. இது குறித்து வசுந்தரா நேற்று ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் நம்பிக்கை மோசடி பிரிவின் கீழ் பிரான்சிஸ் பால் அந்தோணி மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்டதாக கோவையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe