பீளமேட்டியில் பெட்டிக்கடை பாட்டியிடம் கைவரிசை

published 1 year ago

பீளமேட்டியில் பெட்டிக்கடை பாட்டியிடம் கைவரிசை

கோவை: கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் ரோட்டை சேர்ந்தவர் ஆத்தாயி(67). இவர் அந்த பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.

இவர் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த வாலிபர் ஒருவர் திடீரென அவர் கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க செயினை பறித்தார்.

பின்னர் பைக்கில் காத்திருந்த மற்றொரு வாலிபருடன் தப்பி சென்று விட்டார். இது குறித்து ஆத்தாயி பீளமேடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி நகை திருடர்களை தேடி வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe