கோவையில் இருந்து கோடநாடு புறப்பட்டார் சசிகலா.. 7 ஆண்டுகளுக்கு பின் மீண்டும்...

published 1 year ago

கோவையில் இருந்து கோடநாடு புறப்பட்டார் சசிகலா.. 7 ஆண்டுகளுக்கு பின் மீண்டும்...

கோவை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கோடநாடு எஸ்டேட்டிற்கு சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு செல்கிறார்.

2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு ஜெயலலிதாவும் சசிகலா வும் கோடநாடு பங்களாவில் தங்கி சென்றனர். பின்னர் டிசம்பர் மாதம் ஜெயலலிதா உயிரிழந்தார். அதன் பிறகு 2017ம் ஆண்டு கோடநாடு பங்களாவில் கொலை கொள்ளை சம்பவம் நடைபெற்றது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அச்சம்பவம் நிகழ்ந்தது  முதல் சசிகலா அங்கு செல்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில் அந்த எஸ்டேட்டில் ஜெயலலிதா வின் சிலை அமைக்கப்பட உள்ளது.  அதன் பூமி பூஜை நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது. 

இந்நிகழ்வில் கலந்து கொல்வதற்காக சசிகலா செல்கிறார். இதற்காக விமானம் மூலம் கோவை வந்தடைந்த அவர் கோவையில் இருந்து சாலை மார்க்கமாக கோடநாடு புறப்பட்டார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe