இந்து அல்லாதவர்கள் இனி பழநி கோயிலில் அனுமதி இல்லை..

published 1 year ago

இந்து அல்லாதவர்கள் இனி பழநி கோயிலில் அனுமதி இல்லை..

கோவை: இந்து அல்லாதவர்களை பழனி கோயிலில் அனுமதிக்கக் கூடாது என்று  உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இந்து அல்லாதவர்களையும், இந்து கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்களையும் பழநி கோயிலுக்குள் அனுமதிக்கக்கூடாது என்ற பொதுநல வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டு நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இன்று தீர்ப்பு வழங்கினார். அதில், இந்து அல்லாதவர்களும், இந்து மத கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்களையும் பழநி கோயிலில் கொடிமரம் தாண்டி உள்ளே நுழைய அனுமதிக்கக்கூடாது என்று உத்தரவிட்டார்.

பழனி கோயிலில் இந்து அல்லாதவர்கள் நுழையத் தடை என்று அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும் என்றும், "சாமி மீது நம்பிக்கை கொண்டு வழிபாடு செய்ய வந்திருக்கிறேன்" என்ற உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டபின் கோயிலில் அனுமதிக்கலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe