கோவையில் டெய்லர் வீட்டில் 25 பவுன் தங்க நகைகள் திருட்டு...

published 1 year ago

கோவையில் டெய்லர் வீட்டில் 25 பவுன் தங்க நகைகள் திருட்டு...

கோவை: கோவையில் டெய்லர் வீட்டில் 25 பவுன் தங்க நகை மற்றும் பணம் திருடு போனது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை குனியமுத்தூர் பிகே புதூரை சேர்ந்தவர் முஸ்தபா(52). டெய்லர். இவர் சம்பவத்தன்று வீட்டைப்பூட்டி விட்டு தனது உறவினர் துக்க நிகழ்வில் பங்கேற்க அவிநாசி சென்றார். பின்னர் கோவை திரும்பினார். தனது உறவினர் ஒருவரிடம் கொடுத்திருந்த சாவியை வாங்கி வீட்டை திறந்து உள்ளே சென்றார். அப்போது வீட்டு அலமாரியில் வைத்திருந்த 25 1/4 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 27 ஆயிரம் ரொக்கம் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். 

உடனே அவர் இது குறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டில் புகுந்து 25 பவுன் நகை மற்றும் பணம் திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe