கோவையில் ரயில் பயணியிடம் கைவரிசை காட்டிய வாலிபர் கைது…

published 1 year ago

கோவையில் ரயில் பயணியிடம் கைவரிசை காட்டிய வாலிபர் கைது…

கோவை: கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ரமணா (45). கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை வந்த இவர் மீண்டும் திருச்சூர் செல்வதற்காக கோவை ரயில் நிலையம் வந்தார். டிக்கெட் எடுத்துவிட்டு ரயில் ஏற சென்றபோது அவருடைய செல்போனை காணவில்லை. தேடி பார்த்தார். ஆனால் செல்போன் கிடைக்கவில்லை. 

இதுகுறித்து அவர் ரயில்வே போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ரமணாவிடம் ஒருவர் நைசாக செல்போன் திருடியது தெரியவந்தது. விசாரணையில், செல்போன் திருடியது  தூத்துக்குடியை சேர்ந்த மணிகண்டன் (35) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe