கோவையில் கோவில் பூசாரியுடன் செல்போனில் பேசிய மனைவி- கணவர் கண்டித்ததால் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி...

published 1 year ago

கோவையில் கோவில் பூசாரியுடன் செல்போனில் பேசிய மனைவி- கணவர் கண்டித்ததால் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி...

கோவை: கோவையில் கோயில் பூசாரியுடன் அடிக்கடி செல்போனில் பேசியதை கணவர் கண்டித்ததால் அவரது மனைவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இது தொடர்பாக போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கோவை துடியலூர் பகுதியில் உள்ள ஒரு கோயிலில் 41 வயது நபர் பூசாரியாக உள்ளார். இவர் அடிக்கடி அந்த பகுதியில் உள்ள 40 வயது பெண்ணிடம் செல்போனில் பேசியுள்ளார். இந்த விவரம் அந்த பெண்ணின் கணவருக்கு தெரிந்து அவர் மனைவியை கண்டித்துள்ளார். மேலும் அவர் தனது மனைவியிடம் செல்போனில் பேசுவதை நிறுத்திக்கொள்ளுமாறு கோயில் பூசாரியை எச்சரித்துள்ளார். இதனால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. 

இதன் காரணமாக கடும் மன உளைச்சலில் இருந்த அந்த பெண் நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையறிந்த பெண்ணின் குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நிலைமைக்கு கோயில் பூசாரிதான் காரணம் என கருதிய 40 வயது பெண்ணின் கணவர் தன்னுடன் 2 பேரை அழைத்து கொண்டு நேற்று அங்குள்ள கோயிலுக்கு சென்றார். அப்போது கோயில் முன்பு நின்று கொண்டிருந்த பூசாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து தகாத வார்த்தைகளால் பேசி பூசாரியை அடித்து உதைத்தனர். இதுகுறித்து பூசாரி அளித்த புகாரின் பேரில் துடியலூர் போலீசார் பூசாரியை தாக்கிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe