சிக்கன் குழம்பு விஷமானது..! சிறுமி உயிரிழப்பு!

published 1 year ago

சிக்கன் குழம்பு விஷமானது..! சிறுமி உயிரிழப்பு!

அரியலூர்: நேற்று மீதமான சிக்கன் குழம்பை இன்று சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்தவர் பள்ளி மாணவி இலக்கியா (வயது 12). பள்ளி விடுமுறை என்பதால் நேற்று இலக்கியாவின் வீட்டில் சிக்கன் குழம்பு சமைக்கப்பட்டது.

இதனிடையே சிக்கன் குழம்பு மீதமாகவே அதனை பத்திரப்படுத்தி வைத்த தாய், இன்று இலக்கியாவுக்கு கொடுத்துள்ளார்.

இலக்கியா உட்பட அவரது தாய், தந்தை, சகோதரியும் மீதமான சிக்கன் குழம்பை சாப்பிட்டனர்.

இதனால் நான்கு பேருக்கும் உடல் நலக்கோளாறு ஏற்பட்டது. தொடந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி இலக்கியா பரிதாபமாக பலியானார். தொடர்ந்து சிறுமியின் சகோதரி தாய் தந்தைக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மீதமான சிக்கன் குழம்பை சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe