கோவையில் ரூ.40 லட்சம் மோசடி செய்த நகைப்பட்டறை உரிமையாளர் கைது…

published 1 year ago

கோவையில் ரூ.40 லட்சம் மோசடி செய்த நகைப்பட்டறை உரிமையாளர் கைது…

கோவை: கோவையில் நகைக்கடை தொடங்குவதாக கூறி உறவினரிடம் ரூ. 40 லட்சம் மோசடி செய்த நகைப்பட்டறை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் கோவிந்தன்(83). இவர் கடந்த 50 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். ஆண்டுக்கு ஒரு முறை கோவையில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு வருவது வழக்கம்.

அப்படி வரும்போது கோவிந்தனின் தங்கை மகன் கோவை செட்டி வீதியை சேர்ந்த நகைப்பட்டறை உரிமையாளர் ஸ்ரீகாந்த்(45) என்பவர், தனது மாமாவிடம் இருவரும் கோவையில் புதிய நகைக்கடை தொடங்கலாம், அதற்கு நீங்கள் ரூ. 40 லட்சம் கொடுங்கள் பார்ட்னராக ஆரம்பிக்கலாம் என தெரிவித்தார்.

இதனை நம்பி நகைக்கடை ஆரம்பிக்க ஆசைப்பட்ட கோவிந்தன், ஸ்ரீகாந்திடம் ரூ. 40 லட்சத்தை கொடுத்தார். ஆனால் பணத்தை பெற்று கொண்ட ஸ்ரீகாந்த் நகைக்கடை ஆரம்பிக்கவில்லை. இதனையறிந்த கோவிந்தன் தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார்.

ஆனால் அவர் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கோவிந்தன் செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் நம்பிக்கை மோசடி பிரிவில் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீகாந்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe