9 வயது சிறுவன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு!

published 2 months ago

9 வயது சிறுவன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு!

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/Gymsw6mPrOK0fU2lrUKwUs

ஹைதராபாத்: தெலுங்கானாவில் 9 வயது சிறுவன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் சிறுவன் ஹர்ஷித் (9 வயது). இவர் தனது பெற்றோருடன் நேற்று புறப்பட்டு திருப்பதிக்குச் சென்றுள்ளார். 


அங்கு சாமி தரிசனம் முடித்துவிட்டு இரவு அனைவரும் வீடு திரும்பியுள்ளனர். வீடு திரும்பியது முதலே சிறுவன் உடல் நலன் குன்றி இருந்துள்ளார்.  பயண அலைச்சல் காரணமாக சிறுவன் சோர்வாக இருக்கலாம் என்று ஹர்ஷித்தின் பெற்றோர் அவரை உறங்கக் கூறியுள்ளனர். ஆனால் சற்று நேரத்தில் சிறுவன் மயங்கியுள்ளார்.

மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்ததில் சிறுவன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருப்பது தெரியவந்தது. சமீப காலமாக குழந்தைகள் மாரடைப்பால் உயிரிழந்து வருவது அதிகரித்து வரும் நிலையில், குழந்தைகள் விஷயத்தில் பெற்றோர் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.





சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw