டெலிகிராம் மூலம் 5.70 லட்சம் மோசடி...

published 1 year ago

டெலிகிராம் மூலம் 5.70 லட்சம் மோசடி...

கோவை: கோவையில் டெலிகிராமில் மெசேஜ் அனுப்பி வாலிபரிடம் ரூ.5.70 லட்சம் மோசடி நடைபெற்றது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர் பூபதி (34). கடந்த 3ம் தேதி இவருக்கு டெலிகிராமில் மெசேஜ் வந்தது. அதில், ஆன்லைனில் பகுதி நேர வேலை இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் உள்ள நம்பரை தொடர்பு கொண்டு பேசியபோது, எதிர்முனையில் பேசிய நபர் ஓட்டல் குறித்து ரிவ்யூ கொடுத்து அதனை ஸ்கிரீன்ஷாட் எடுத்து எங்களுக்கு அனுப்பி வைத்தால், அதிக கமிஷன் பணம் கிடைக்கும் எனவும், இதனை நீங்கள் வீட்டில் இருந்தபடியே எளிதாக செய்யலாம் என ஆசை வார்த்தை கூறினார். 

மேலும் இதற்கு பணம் முதலீடு செய்ய வேண்டும் என்று கூறினார். இதை நம்பிய பூபதி சிறிது, சிறிதாக அந்த நபர் கூறிய வங்கி கணக்குகளில் ரூ.5.70 லட்சம் பணம் அனுப்பினார். பின்னர் அவர்கள் கொடுக்கும் ஆன்லைன் பணிகளையும் செய்து கொடுத்தார். ஆனால், அவர்கள் கூறியபடி பணம் தரவில்லை. தொடர்பு கொண்டு கேட்டபோது வரி செலுத்த வேண்டியுள்ளது, அதற்கு மீண்டும் நீங்கள் பணம் அனுப்பினால் தான் உங்களது மொத்த பணத்தையும், கமிஷன் தொகையுடன் சேர்த்து எடுக்க முடியும் என கூறினார். அதன்பிறகு அந்த நம்பரை தொடர்பு கொள்ள முடியவில்லை. சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. பூபதியிடம் மர்ம நபர்கள் மொத்தமாக ரூ.5.70 லட்சம் மோசடி செய்து விட்டனர். இதுகுறித்து பூபதி கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe