காவல்துறை மண்டலங்களுக்கான தடகள போட்டிகள்- வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கிய டிஜிபி...

published 1 year ago

காவல்துறை மண்டலங்களுக்கான தடகள போட்டிகள்- வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கிய டிஜிபி...

கோவை: கோவை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற  63 வது காவல்துறை மண்டலங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் பதக்கங்களை வழங்கி பாராட்டினார்.

கோவை நேரு விளையாட்டு  மைதானத்தில் 
தமிழ்நாடு காவல்துறை சார்பில், 63-வது காவல்துறை மண்டலங்களுக்கு இடையேயான தடகளப் போட்டிகள் 3 நாட்களாக நடைபெற்று வந்தது. காவல்துறை விளையாட்டுப் போட்டிகள் நேற்று மாலை நிறைவடைந்ததை 
முன்னிட்டு  வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சங்கர் ஜிவால் பதக்கங்களை வழங்கினார்.
இந்தப் போட்டியில், மேற்கு மண்டலம், மத்திய மண்டலம், தென் மண்டலம், வடக்கு மண்டலம், சென்னை பெருநகர காவல் ஆணையரகம், ஆவடி காவல் ஆணையரகம், தாம்பரம் காவல் ஆணையரகம், ஆயுதப்படை, தமிழ்நாடு கமாண்டோ படைப்பிரிவு ஆகிய 9 அணிகளின் சார்பில் காவல்துறை வீரர்கள், வீராங்கனைகள் என மொத்தம் 743 பேர் கலந்து கொண்டனர். 
இதில் பொதுவான பிரிவு, அமைச்சுப் பணியாளர்கள் 30 வயதுக்கு உட்பட்டோர், 30 முதல் 39 வயதுக்கு உட்பட்டோர், 40 முதல் 49 வயதுக்கு உட்பட்டோர், 50 முதல் 60 வயதுக்கு உட்பட்டோர், படைவீரர் காவல்துறையினர் பிரிவில் 35 முதல் 39 வயதுக்கு உட்பட்டோர், 40 முதல் 44 வயதுக்கு உட்பட்டோர், 45 முதல் 49 வயதுக்கு உட்பட்டோர், 50 முதல் 54 வயதுக்கு உட்பட்டோர், 55 முதல் 60 வயதுக்கு உட்பட்டோர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. 


 

பொதுப்பிரிவினரில் ஆண்களுக்கு 10 ஆயிரம் மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல் 1,500 மீட்டர் ஒட்டம், உயரம் தாண்டுதல், தடை தாண்டுதல், ஈட்டி எறிதல், 400 மீட்டர் ஓட்டம் உள்ளிட்ட போட்டிகளும், பெண்களுக்கு 10 ஆயிரம் மீட்டர் ஓட்டம், 1,500 மீட்டர் ஓட்டம், தடை தாண்டுதல் உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 400 மீட்டர் ஓட்டம் உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்பட்டன. 
அதேபோல், வயது பிரிவுகள் வாரியாக ஓட்டப்பந்தயப் போட்டிகளும், குண்டு எறிதல் போட்டி அனைத்து பிரிவினருக்கும் நடத்தப்பட்டன.
பதக்கங்களை வழங்கிய

பின்
தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சங்கர் ஜிவால் பேசினார். அப்போது தமிழ்நாடு காவல்துறையில்  பணிகள் அதிகமாக இருப்பதால், விளையாட்டுக்கு போதிய பயிற்சி கிடைக்காமல் உள்ளது எனவும், ஆனால்  இடைப்பட்ட நேரத்தில காவலர்கள்  விளையாட்டில் கலந்துகொண்டது மிகப்பெரிய விஷயம் என தெரிவித்தார்.
இந்த விளையாட்டு போட்டிகளில் புதிய சாதனையை சிலர் படைத்துள்ளனர் எனவும்,
14 புதிய சாதனைகளில், 12 பெண்கள் சாதனை படைத்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
வாழ்க்கையில் உயர்ந்து செல்வதை நோக்கமாக வைத்துக்கொள்ள  வேண்டும், விளையாட்டு போட்டிகளில் நிபுணர்கள் பயிற்சி இல்லை, அதில் ஒரு இடைவெளியாக உள்ளது எனவும், முறையான 
பயிற்சி இருந்தால் தேசிய அளவில் நமது காவல்துறை பல பதக்கங்களை பெறுவார்கள் எனவும் தெரிவித்தார்.
 

கடந்தாண்டு புதிய பயிற்சிக்காக பெங்களூர், பட்டியாலாவில் அரசு செலவில் பயிற்சி எடுக்கும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும்,குறிப்பிட்ட வண்ணங்களில் காலணி உள்ளிட்ட அம்சங்களை நமது நிதியில் இருந்து கொடுக்கலாம்,
விளையாட்டு உபகரணங்கள் தரமுள்ளவற்றை தயார் செய்யலாம் எனவும் தெரிவித்தார்.
பெரு நகரங்களில் மட்டுமே நடந்த நிலையில் முதல் முறை கேலோ இந்தியா விளையாட்டுகள் கோவை, மதுரை போன்ற நகரங்களில் நடந்தது எனக்கூறிய அவர்,
முதல் முறையாக  தமிழகத்தில் குதிரை பந்தயம் தமிழ்நாடு காவல்துறை வரலாற்றில் நடத்த திட்டமிட்டுள்ளோம் என டிஜிபி  சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe