தொழிலில் பங்குதாரர்களாக சேர்த்துக் கொள்வதாக கூறி ஐந்து லட்ச ரூபாய் மோசடி- கோவை போலிசார் விசாரணை...

published 1 year ago

தொழிலில் பங்குதாரர்களாக சேர்த்துக் கொள்வதாக கூறி ஐந்து லட்ச ரூபாய் மோசடி- கோவை போலிசார் விசாரணை...

கோவை: திருப்பூர் மாவட்டம் அம்மாபாளையத்தை சேர்ந்தவர் பிரபாகரன் வயது 33 இவர் மற்றும் இவர் பாலு பிரதாப்  இருவரும் சேர்ந்து ஆன்லைன் மூலம் துணி விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில் ஆன்லைனில் வந்த விளம்பரம் ஒன்றில்
எவர் கிரீன் சலூன்  என்ற கடையில் பங்குதாரர்களாக இணைந்து கொள்ள விரும்புவோர் தங்களை தொடர்பு கொள்ளலாம் என குறிப்பிட்டு இருந்தது இதை பார்த்து அதில் கொடுக்கப்பட்டிருந்த எண்ணில் தொடர்பு கொண்டு பார்த்திபன் மற்றும் அவரது மனைவி சிந்து விடம்  பங்குகள் குறித்து கேட்டறிந்தார். 

பின் பிரபாகரன் மற்றும் அவரது நண்பர் பாலு பிரதாப் இருவரும் எவர் கிரீன் சலூன் என்ற கடையின் பங்குதாரர்களாக இணைந்தனர் இதற்காக ஐந்து லட்ச ரூபாய் ஆன்லைன் மூலம் செலுத்தி பதிவு செய்து கொண்டனர். பின் பார்த்திபன் மற்றும் சிந்து அவர்களுக்கு எந்த வித பங்குகளையும் கொடுக்கவில்லை. 

இந்நிலையில் கோவை சரவணம்பட்டி துடியலூர் சாலையில் உள்ள எவர்கிரீன் சலூன் கடைக்குச் சென்று பார்த்திபனிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் பணத்தை திருப்பி கொடுக்காமல் அவர்களை மிரட்டி உள்ளனர். பின்னர் இச்சம்பவம் குறித்து பிரபாகரன் கோவை சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe