கோவை கணபதி அருகே சுயநினைவின்றி கிடந்த வாலிபர் உயிரிழப்பு...

published 1 year ago

கோவை கணபதி அருகே சுயநினைவின்றி கிடந்த வாலிபர் உயிரிழப்பு...

கோவை: கோவை கணபதி ராமகிருஷ்ணாபுரம் அருகே கடந்த 14ம் தேதி வாலிபர் ஒருவர் சுயநினைவை இழந்து மயங்கி கிடந்தார். 

இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். 

சுமார் 35 வயதுடைய அந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் கிடைக்கவில்லை. இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe