வரவுள்ள பாராளுமன்ற தேர்தல்- கோவையில் மநீம ஒட்டியுள்ள போஸ்டர்...

published 1 year ago

வரவுள்ள பாராளுமன்ற தேர்தல்- கோவையில் மநீம ஒட்டியுள்ள போஸ்டர்...

கோவை: அடிமட்ட சாமான்யனின் குரலாய் பாராளுமன்றத்தில் ஒலிக்க நம்மவரின் கரத்தை வலுப்படுத்துவோம் என கோவையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போஸ்டர்க்ள் ஒட்டப்பட்டுள்ளன.

கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின்  ஏழாம்  ஆண்டு துவக்க விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு அக்கட்சி சார்பில் கோவையில் ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. 

அந்த போஸ்டரில் "தமிழக மக்களின் அடிமட்ட சாமான்யனின் குரலாய் பாராளுமன்றத்தில் ஒலிக்க... நம்மவரின் கரத்தை வலுப்படுத்துவோம்! என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7ம் ஆண்டு துவக்க என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், திமுகவுடன் மநீம கூட்டணி அமைத்துள்ள நிலையில் கோவையில் ஒட்டபட்டுள்ள இந்த போஸ்டர்கள் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe