தடாகம் சாலையில் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளை!

published 11 months ago

தடாகம் சாலையில் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளை!

கோவை: கோவையில் கத்தியை காட்டி மிரட்டி ராஜஸ்தான் வாலிபரிடம் ரூ. 5.20 லட்சம் மதிப்பிலான நகை, செல்போன் பறித்து சென்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் பாபுலால்(44). இவர் கோவை வடவள்ளி ரோடு இடையர்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார். தனது மாமாவின் டெக்ஸ்டைல் கடையில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 16ம் தேதி பாபுலால் தடாகம் ரோட்டில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றார். அப்போது அங்கு வந்த 2 பேர் அவரிடம் தகராறில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து பாபுலால் தனது பைக்கில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது டாஸ்மாக் கடையில் தகராறில் ஈடுபட்ட அதே நபர்கள் மற்றொரு பைக்கில் அவரை பின் தொடர்ந்து வந்தனர். அவர் இடையர்பாளையம் அருகே சென்றபோது இருவரும் பாபுலாலை வழிமறித்து நிறுத்தினர்.

பின்னர் அவரை தகாத வார்த்தைகளால் பேசி திட்டினர். தொடர்ந்து கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 12 பவுன் செயின், 1.5 கிராம் கடுக்கன் மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.

இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 5,20,300 என்று தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பாபுலால் இந்த சம்பவம் குறித்து கவுண்டம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரிடம் நகை, செல்போனை வழிப்பறி செய்த 2 பேரை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe