கோவையில் உதவி கலெக்டர் வீட்டிலேயே கைவரிசை!

published 11 months ago

கோவையில் உதவி கலெக்டர் வீட்டிலேயே கைவரிசை!

கோவை: கோவை சரவணம்பட்டியில் மாஜி உதவி கலெக்டர் வீட்டில் நகை, 1.5 கிலோ வெள்ளி கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கோவை சரவணம்பட்டி மகாத்மா நகரை சேர்ந்தவர் நாகேந்திரன் (64). உதவி கலெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவிக்கு உடல் நலம் சரியில்லாததால், அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த சில நாட்களாக நாகேந்திரன் மருத்துவமனையில் மனைவியுடன் உடன் இருந்து அவரை கவனித்து வருகிறார். இந்நிலையில், நேற்று அவரது வீட்டுக்கு வேலைக்கார பெண் ஒருவர் வந்தார்.

அப்போது வீட்டு கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இது குறித்து அந்த பெண் உடனே நாகேந்திரனுக்கு போனில் தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து நாகேந்திரன் வீட்டுக்கு சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 3.75 பவுன் நகை மற்றும் 1.5 கிலோ வெள்ளிப்பொருட்கள் கொள்ளை போனது தெரிந்தது.

சில நாட்களாக வீடு பூட்டப்பட்டிருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து நாகேந்திரன் அளித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்தனர்.

அப்போது கதவு மற்றும் பீரோவில் 2 கைரேகை பதிவுகளை கைப்பற்றினர். மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து, கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe