கோவையில் டாக்டரிடம் அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறிப்பு...

published 11 months ago

கோவையில் டாக்டரிடம் அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறிப்பு...

கோவை: கோவையில் அரிவாளை காட்டி மிரட்டி டாக்டரிடம் பணம் பறித்த 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை மசக்காளிபாளையம் ராம் லட்சுமண் நகரை சேர்ந்தவர் ஷ்யாம் குமார்(32). கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராக உள்ளார். இவர் நேற்று முன்தினம் கொடிசியா மைதானம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் ஷ்யாம் குமாரை வழிமறித்தனர். அவரிடம் பணம் கேட்டு மிரட்டினர். 

 

அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த 2 பேரும் அரிவாளை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த செல்போனை பறித்தனர். பின்னர் அதன் மூலம் அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ. 20 ஆயிரத்தை கூகுள் பே மூலம் தங்களது வங்கி கணக்கிற்கு அனுப்பினர். மேலும் அவரது ஏடிஎம் கார்டையும் பறித்து ரகசிய எண்ணை கேட்டு அதில் இருந்த ரூ. 50 ஆயிரத்தை எடுத்தனர். பின்னர் அவரை மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். 

இதனால் அதிர்ச்சியடைந்த ஷ்யாம் குமார் இது குறித்து பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து டாக்டரை அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறித்து சென்றவர்களை தேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe