வெளிநாட்டில் வேலை தருவதாக மோசடி செய்த தம்பதி- கோவை போலிசார் விசாரணை...

published 11 months ago

வெளிநாட்டில் வேலை தருவதாக மோசடி செய்த தம்பதி- கோவை போலிசார் விசாரணை...

கோவை: வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ. 2.97 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்தவர் பாரதிராஜா(29). டீக்கடை நடத்தி வருகிறார். இவர் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:

கோவையை சேர்ந்த ராமகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி ரோஷினி பாப்பநாயக்கன்பாளையத்தில் வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தினர். அந்த நிறுவனத்தின் விளம்பரத்தை ஆன்லைன் மூலம் பார்த்ததில், வெளிநாட்டில் வேலை பெற்று தருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

நான் அவர்களை கடந்த 2021ம் ஆண்டு தொடர்பு கொண்ட போது போலந்து நாட்டில் 5 மாதங்களுக்குள் வேலை வாங்கி தருவதாக தெரிவித்தனர். இதனை நம்பி நான் அவர்களது வாங்கி கணக்கிற்கு 4 தவணைகளாக ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் ரூ. 2.97 லட்சம் அனுப்பினேன். ஆனால் அவர்கள் கூறியபடி வேலை வாங்கி தரவில்லை. பணத்தை திருப்பி கேட்டபோது கொடுக்கவில்லை. 

அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்திருந்தார். புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் ராமகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி ரோஷினி மீது நம்பிக்கை மோசடி பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe