கோவையில் வாகனத்தை வாடகைக்கு எடுத்து இரும்பு பொருட்கள் திருட்டு- இருவர் கைது...

published 11 months ago

கோவையில் வாகனத்தை வாடகைக்கு எடுத்து இரும்பு பொருட்கள் திருட்டு- இருவர் கைது...

கோவை: கோவை தடாகம் சாலை சோமையனூர் பகுதியில் தனியார் செங்கல் சூலையில் இருந்து கடந்த இரண்டு மாதங்களாக பழைய இரும்பு பொருட்கள் தொடர்ந்து திருடப்பட்டு வந்துள்ளது. இது குறித்து சேம்பர் நிர்வாகிகள் தடாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், தனிப்படை அமைத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் இருவர் இந்த திருட்டு சம்பவத்தை செய்தது தெரிய வந்தது.

 

அதனைத் தொடர்ந்து அவர்களை தேடி கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளும் பொழுது அவர்கள் சின்ன தடாகம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் மற்றும் ஜீவானந்தம் என்பது தெரிய வந்தது. 

மேலும் இவர்கள் திருடிய பொருட்களை எடுத்துச் செல்வதற்காக, Hello Truck என்ற வாகனத்தை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தியதும் தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து அந்த வாகனம் மற்றும்  ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe