மகா சிவராத்திரியை முன்னிட்டு கோவை வெள்ளியங்கிரியில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்...

published 11 months ago

மகா சிவராத்திரியை முன்னிட்டு கோவை வெள்ளியங்கிரியில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்...

கோவை: நாளை மகா சிவராத்திரி கொண்டாடப்பட உள்ளது. சிவனுக்காக மேற்கொள்ளப்படும் பல்வேறு வழிபாடுகளில் மகாசிவராத்திரி வழிபாடு மிக முக்கியமான ஒன்றாகும். இந்நாளில் பக்தர்கள் அனைவரும் இரவு முழுவதும் கண்விழித்து சிவனை  வழிபடுவர். அனைத்து சிவாலயங்களிலும் இரவு முழுவதும் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்படும்.

 

இந்நிலையில் தென் கைலாயம் என்று அழைக்கப்படும் கோவையில் உள்ள வெள்ளியங்கிரி மலைக்கோவிலுக்கு செல்வதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு அரசு அனுமதி அளித்துள்ளதை தொடர்ந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறிச் சென்று சிவனை வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாளை மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு ஒரே நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். 

 

இதனால் வெள்ளியங்கிரி அடிவாரக் கோவில் பக்தர்கள் கூட்டத்துடன் காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து மலையேறும் பாதை திறக்கப்பட்டதை தொடர்ந்து திரண்டு இருந்த பக்தர்கள் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய என்ற சிவநாமத்தை முழங்கியபடி மலையேறினர்.

இந்நிலையில் மகாசிவராத்திரியை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பிலும் கோவை மாவட்ட வனத்துறை சார்பிலும் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe