கோவையில் லாரியின் டயர் கழண்டு ஓடி பைக்கில் சென்ற வாலிபர் பலி

published 11 months ago

கோவையில் லாரியின் டயர் கழண்டு ஓடி பைக்கில் சென்ற வாலிபர் பலி

கோவை: கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் நந்தகுமார் (29). இவர் நேற்று தனது நண்பர் சபரியுடன்(22) கோவை ஆத்துப்பாலம் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

பைக்கை சபரி ஓட்ட நந்தகுமார் பின்னால் அமர்ந்திருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரியின் ஸ்டெப்னி டயர் கழண்டு சாலையில் ஓடியது. அதன் மீது எதிர்பாராத விதமாக சபரி ஓட்டி சென்ற பைக் மோதியது.

இதில் நந்தகுமார் தூக்கி வீசப்பட்டு உடலில் பலத்த காயம் அடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கோவை மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe