கோவை அருகே தீ விபத்து- பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்...

published 11 months ago

கோவை அருகே தீ விபத்து- பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்...

கோவை: கோவை அருகே தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.

கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மனைவி ரம்யா (42). இவர்கள் பொங்காலிபாளையம் கருப்பராயன் கோயில் தோட்டம் பகுதியில் தனியார் நிறுவனம் நடத்தி வருகின்றனர். 

இங்கு மரத்திலான இருக்கைகள், டேபிள்கள் தயாரித்து விற்பனை செய்கின்றனர். 

இந்நிலையில், நேற்று முன்தினம் தனியார் நிறுவனத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. திடீரென மள, மள என தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதைப்பார்த்த ஊழியர்கள் உரிமையாளர் ஜெகநாதனுக்கு தகவல் கொடுத்து தீயை அணைக்க முயன்றனர். 

ஆனால், அங்கிருந்த பல லட்சம் மதிப்பிலான மரப்பொருட்கள் தீயில் கருகி நாசமானது. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.30 லட்சம் என தெரிகிறது. இவ்விபத்து குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். 

முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து நடந்ததாக தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe