கோவை வெள்ளக்கிணறு பகுதியில் அரிவாளால் தாக்கி செல்போன் பறித்து சென்ற கும்பல்...

published 11 months ago

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் அரிவாளால் தாக்கி செல்போன் பறித்து சென்ற கும்பல்...

கோவை: கோவை ஜிஎன் மில்ஸ் உழைப்பாளர் தெருவை சேர்ந்தவர்கள் சரத்(32) மற்றும் பிஸ்மி(44). நண்பர்களான இருவரும் வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். 

நேற்று முன்தினம் இரவு இருவரும் வேலை முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். வெள்ளக்கிணறு ரயில்வே கேட் அருகே நடந்து சென்ற போது 4 பேர் கும்பல் அவர்களை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியது. 

அவர்கள் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பிஸ்மியை தாக்கினர். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் வலியால் அலறினார். பின்னர் அந்த கும்பல் அவரது செல்போனை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றது. 

இதனால் அதிர்ச்சியடைந்த சரத் தனது நிறுவன உரிமையாளரை செல்போனில் தொடர்பு கொண்டு விவரத்தை கூறினார். அவர் விரைந்து வந்து தாக்குதலில் காயமடைந்த பிஸ்மியை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். 

இது குறித்து சரத் துடியலூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குபதிவு செய்து அரிவாளால் வாலிபரை தாக்கி செல்போன் பறித்து சென்ற கும்பலை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe