கோவையில் இ-மெயில் அனுப்பி ரூ.2.56 லட்சம் மோசடி…

published 11 months ago

கோவையில் இ-மெயில் அனுப்பி ரூ.2.56 லட்சம் மோசடி…

கோவை: கோவை ராஜவீதியை சேர்ந்தவர் சையது தாஜ் அஹமது(55).  இவர் தனியார் பவுண்டரி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். 

இவர்களது நிறுவனத்திற்கு ஹைட்ராலிக் டிரில்லிங் இயந்திரம் தேவைப்பட்டது. அதற்காக ஆன்லைன் மூலம் சில நிறுவனங்களை தேடி பார்த்தார். தொடர்ந்து ஒரு நிறுவனத்தை ஆன்லைனில் தொடர்பு கொண்டு விலை பட்டியலை கேட்டார். 

சிறிது நேரத்தில் அந்த நிறுவனத்தின் பெயரில் இருந்து மெயில் ஐ.டி. வந்தது. அதில் விலைப்பட்டியலும், வங்கி கணக்கு எண்ணும் அனுப்பப்பட்டது.  40 சதவீத அட்வான்ஸ் தொகையை அனுப்ப வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. 

அந்த வங்கி கணக்கிற்கு சையது தாஜ் அகமது ரூ.2.56 லட்சத்தை அனுப்பி வைத்தார். அதன் பின் அவருக்கு எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை. இதனால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தை அவர் தொடர்பு கொண்டு கேட்டார். 

அப்போது அவர்கள் தங்களது நிறுவனத்தில் இருந்து எந்த மெயிலும் அனுப்பவில்லை என்றனர். ஒரு நிறுவனத்தின் பெயரில் போலியான இ-மெயில் அனுப்பி மோசடி செய்து விட்டனர். 

இது குறித்த புகாரின் பேரில் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe