பீளமேடு அருகே வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி...

published 11 months ago

பீளமேடு அருகே வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி...

கோவை: வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ. 1 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கோவை பீளமேடு அவிநாசி ரோட்டில் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதனை கோவை ஜிவி ரெசிடென்சி பகுதியை சேர்ந்த செந்தில் மற்றும் அவரது மனைவி ராதிகா(36) நடத்தி வருகின்றனர். 

இவர்கள் ஜெர்மனி, போர்ச்சுகல் உள்ளிட்ட வெளிநாடுகளில் வேலை வாங்கி தரப்படும் என அறிவிப்பு செய்தனர். இதனை பார்த்த கவுண்டம்பாளையம் ஸ்ரீதேவி நகரை சேர்ந்த சிவில் இன்ஜினியர் சங்கீத்குமார்(27) என்பவர் இருவரையும் தொடர்பு கொண்டார். 

அப்போது அவர்கள் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு ரூ. 1 லட்சம் செலவாகும் என கூறினர். இதனை நம்பிய சங்கீத் குமார் அவர்களிடம் ரூ. 1 லட்சம் கொடுத்தார். ஆனால் அவர்கள் கூறியபடி வெளிநாட்டு வேலைக்கு ஏற்பாடு செய்ய வில்லை.

இது குறித்து சங்கீத் குமார் கேட்டபோது, அவர்கள் ரூ. 1 லட்சத்தை திருப்பி கொடுக்காமலும், வேலை வாங்கிதராமலும் மோசடி செய்து விட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த சங்கீத் குமார் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். 

அதன்பேரில், போலீசார் நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராதிகாவை கைது செய்தனர். அவரது கணவர் செந்தில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. அவரை போலீசார் தேடி வருகின்றனர். இதேபோல் வேறு யாரிடமாவது மோசடி செய்துள்ளனரா? என்பது குறித்தும் விசாரிக்கின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe