கோவையில் கிரேன் மோதி சைக்கிளில் சென்றவர் பரிதாப பலி!

published 11 months ago

கோவையில் கிரேன் மோதி சைக்கிளில் சென்றவர் பரிதாப பலி!

கோவை: கோவை சுந்தராபுரம் சங்கம் தெருவை சேர்ந்தவர் நாகராஜ்(54). தொழிலாளி.

இவர் நேற்று சைக்கிளில் புட்டுவிக்கி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கிரேன் எதிர்பாராத விதமாக நாகராஜ் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட நாகராஜ் மீது கிரேன் ஏறியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதபாமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து தொடர்பாக கோவை மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கஞ்சா விற்ற 3 பேர் கும்பல் கைது

கோவை கரும்புக்கடை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாரமேட்டில் உள்ள பேக்கரி அருகே காலி இடத்தில் 3 பேர் கும்பல் நின்றிருந்தனர்.

அவர்களை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்ததில் அவர்கள் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கரும்புக்கடை சாரமேட்டை சேர்ந்த கார் மெக்கானிக் முஜிப் ரகுமான்(27), தெற்கு உக்கடம் ஜிஎம் நகரை சேர்ந்த பெயிண்டர்கள் சனுப்(22), முகமத் நவாஸ்(22) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீது ஏற்கனவே கஞ்சா விற்ற வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe