பீளேமேட்டில் டிபன் கடைக்காரரிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு!

published 11 months ago

பீளேமேட்டில் டிபன் கடைக்காரரிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு!

கோவை: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை சேர்ந்தவர் வினித்குமார்(25). இவர் கோவை பீளமேட்டில் தங்கி சித்ரா பூங்கா நகரில் டிபன் கடை நடத்தி வருகிறார்.

நேற்று வினித் குமார் வழக்கம்போல வியாபாரத்தை கவனித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் அவரிடம் பணம் கேட்டார். அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி வினித்குமாரிடம் ரூ. 300 ஐ பறித்து கொண்டு தப்பினார்.

இது குறித்து வினித்குமார் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் கத்தி முனையில் பணம் பறித்தது புதுக்கோட்டையை சேர்ந்த டிரைவர் அரவிந்த்ராஜ்(20) என்பது தெரியவந்தது.

போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe