கொரோனா அறிகுறி உள்ளதா? : கோவை மாநகரில் 300 பேர் தீவிர பணி..!

published 2 years ago

கொரோனா அறிகுறி உள்ளதா? : கோவை மாநகரில் 300 பேர் தீவிர பணி..!

கோவை: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சியில் 300 பேர் சளி, காய்ச்சல் கண்டறியும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. இந்த 100 வார்டுகளில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் மூன்றாவது அலை உச்சத்திலிருந்த போது மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் பேர் வரை தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 

இந்நிலையில் தமிழக அரசின் தொடர் முயற்சி மற்றும் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன. இதன் கொரோனா வைரஸ் பரவல் குறைந்தது. தற்போது கோவையில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடு, வீடாகச் சென்று சளி, காய்ச்சல் உள்ளதா? போன்ற கொரோனா தொற்றைக் கண்டறியும் பணிகளை மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து சுகாதாரத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "கோவை மாநகராட்சி பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று கொரோனா அறிகுறி உள்ளதா? என ஆய்வும் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வார்டு 3 பேர் வீதம் 100 வார்டுகளுக்கு 300 பேர் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர், என்றார். 

சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe  செய்வதன் மூலமாக..
எங்கள் YouTube பக்கம் : https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe