இன்றும் எகிறியது தங்கம் விலை! ஒரே நாளில் ரூ.680 அதிகரிப்பு!

published 10 months ago

இன்றும் எகிறியது தங்கம் விலை! ஒரே நாளில் ரூ.680 அதிகரிப்பு!

தங்கம் விலை வரலாற்றில் இல்லாத வகையில் அதிகரித்துள்ள நிலையில் இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.680 அதிகரித்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரத்தை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

இந்திய மக்களின் பாரம்பரியத்தோடு ஒன்றி இருப்பது தங்கம். தங்கம் இல்லாமல் எந்த சுப நிகழ்ச்சிகளும் நடக்காது என்ற அளவுக்கு இன்றியமையாத ஒரு பொருளாக உள்ளது. 

இப்படிப்பட்ட தங்கம் விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தாறுமாறாக அதிகரித்து வருகிறது. கடந்த 28ம் தேதி தங்கம் விலை முதன் முறையாக ரூ.50,000ஐ தொட்டது. 

விலை அதிகரித்து விட்டது, அதனால் பொதுமக்கள் நுகர்வு குறைந்து மீண்டும் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மறுநாளே பவுனுக்கு ரூ.1,120 அதிரடியாக அதிகரித்தது. 

இது சாமானிய மக்களுக்கு பேரிடியாக அமைந்தது. கடந்த 30ம் தேதி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.160 குறைந்தது. நேற்று விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

இதனிடையே இன்று மீண்டும் அதிரடியாக விலை அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் 22 காரட் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6455க்கும் ஒரு பவுன் ரூ.51,640க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. பவுனுக்கு ரூ.560 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.5,288க்கும் ஒரு பவுன் ரூ.42,304க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி கிராமுக்கு 60பைசா உயர்ந்து, ஒரு கிராம் ரூ.81.60க்கும், ஒரு கிலோ ரூ.81,600க்கும் விற்பனையாகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe