6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

published 10 months ago

6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை: தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று இரவு வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வெயில் இன்று பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தைத் தாண்டியுள்ளது. சென்னையை விட கோவையில் அதிக அளவில் வெப்பம் பதிவாகியுள்ளது. கோவையில் இன்று 39 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ள நிலையில், 

இன்று 6 மாவடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மதியம் 3 மணி முதல் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் மிதமானது முதல் லேசான இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe