கணுவாய் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாகன தணிக்கை- மாவட்ட ஆட்சியர் ஆய்வு...

published 10 months ago

கணுவாய் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாகன தணிக்கை- மாவட்ட ஆட்சியர் ஆய்வு...

கோவை: நாடாளுமன்ற பொது தேர்தலை முன்னிட்டு கோவையில்  தேர்தல் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர், காவல் துறையினர்  வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 

அரசு நிர்ணயித்த தொகையை விட கூடுதல் தொகையை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்தால் அந்த தொகை அல்லது பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கணுவாய் பகுதியில் நாடாளுமன்ற பொது தேர்தலை முன்னிட்டு நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன தணிக்கை மேற்கொண்டு வருவதை கோவை மாவட்ட ஆட்சித் தலைவரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன், வட்டாட்சியர் மணிவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe