கோவையில் ஆசீர்வதிப்பது போல் நடித்த திருநங்கை : ரூ.8 ஆயிரம் அபேஸ்..

published 2 years ago

கோவையில் ஆசீர்வதிப்பது போல் நடித்த திருநங்கை : ரூ.8 ஆயிரம் அபேஸ்..

கோவை: கோவை விமான நிலையம் அருகில் உள்ள ஜி.ஆர்.ஜி பகுதியைச் சேர்ந்தவர் மரிய பிரதீப் (வயது 42).

இவர் சம்பவத்தன்று மதியம் தனது மனைவியுடன் கொடிசியா வளாகம் அருகில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் தனது மகனை அழைப்பதற்காக காரில் சென்று அங்கு நின்றிருந்தார். அப்போது அவரது காரின் அருகே மொபட்டில் 2 திருநங்கைகள் வந்தனர். அதில் ஒரு திருநங்கை  மரிய பிரதீப்பிடம் சென்று பணம் கேட்டுள்ளார்.

மரிய பிரதீப் தனது பர்ஸில் இருந்து  ரூ.10 எடுத்துக் கொடுத்தார். அப்போது அவர் ஒரு ரூபாய் நாணயம் கொடுங்கள் உங்களுக்கு ஆசீர்வதித்து தருகிறேன் என கூறினார். இதை அடுத்து மரிய பிரதீப் ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து கொடுத்தார்.

அவர் அதை வாங்கி ஆசீர்வதிப்பது போல நடித்து மரிய பிரதீப்பின் பரசில் வைத்து விட்டு அங்கு காத்திருந்த மற்றொரு திருநங்கையுடன் சென்றார். சிறிது நேரம் கழித்து பார்த்தபோது அவரது பர்சில் இருந்த ரூ.8 ஆயிரம் மாயமாகி இருந்தது.  இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மரிய பிரதீப் அந்த திருநங்கைகளை தேடினார். ஆனால் அதற்குள் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதுகுறித்து மரிய பிரதீப் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கவுண்டம்பாளையம் சக்தி நகரை  சேர்ந்த  இளவஞ்சி(40) என்ற திருநங்கை பணத்தைத் திருடியது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் இளவஞ்சியை கைது செய்தனர்.  அவரிடம் இருந்து ரூ.3 ஆயிரத்தை பரிமுதல் செய்தனர். 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe