சிறப்பான, வளமான எதிர்காலம் உருவாக சிந்தித்து வாக்களியுங்கள் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் தீவிர பிரசாரம்

published 10 months ago

சிறப்பான, வளமான எதிர்காலம் உருவாக சிந்தித்து வாக்களியுங்கள் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் தீவிர பிரசாரம்

கோவை: கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வீரகேரளம் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் இன்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக சிங்கை ராமச்சந்திரன் களம் காண்கிறார். 

இவர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மக்களிடம் தீவிரமாக இரட்டை இலைக்கு ஓட்டு சேகரித்து வருகிறார். இந்நிலையில், இன்று அவர் வடக்கு சட்டமன்ற பகுதிகளான பிஎன் புதூரில் தனது பிரசாரத்தை துவங்கினார். தொடர்ந்து அவர் சீரநாயக்கன்பாளையம், வீரகேரளம், பொங்காளியூர், லிங்கனூர், சத்யா காலனி, அஜ்ஜனூர், சுண்டபாளையம், டேங்க்பெட் லைன், பூசாரிபாளையம் பகுதி மக்களிடம் அதிமுக அரசின் திட்டங்களை எடுத்து கூறி வாக்கு சேகரித்தார். உடன் அதிமுக, கூட்டணி கட்சி தொண்டர்கள் வீடு, வீடாக சென்று துண்டு பிரசுரங்களை கொடுத்து இரட்டை இலைக்கு ஓட்டு கேட்டனர். 

இன்று பிற்பகலில் அவர் வடவள்ளி பகுதிகளான ஓணாபாளையம், பொம்மனாம்பாளையம், கல்வீரம்பாளையம், மருதமலை அடிவாரம், மருதாபுரம், இந்திராநகர், ராஜீவ்காந்தி நகர், கோகுலம் காலனி உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வேனில் மக்களை சந்தித்து ஆதரவு திரட்ட உள்ளார். 

அவர் பிரசாரத்தின்போது, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். ஒன்றிய அரசின் விரோத போக்கால் ஜிஎஸ்டி வரி உயர்வால் தொழில்கள் நலிவடைந்துள்ளன. இதனைப்போக்கவும், சிறப்பான, வளமான எதிர்காலம் உருவாகவும் சிந்தித்து வாக்களிக்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த பிரசாரத்தின்போது அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், கூட்டணி கட்சியினர் திரளாக கலந்துகொண்டு சிங்கை ராமச்சந்திரன் வெற்றி பெற இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க கேட்டு கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe