கோவை சிறையில் ஆயுள் தண்டனை கைதி சாவு…

published 2 weeks ago

கோவை சிறையில் ஆயுள் தண்டனை கைதி சாவு…

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/CFoSUzRjtqAEmBrOacEIKZ

கோவை: ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்தவர் கனகராஜ்(51). இவர் கடந்த 2010ம் ஆண்டு அப்பகுதியில் நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். 

இந்த வழக்கில் அவருக்கு கோர்ட் ஆயுள் தண்டனை விதித்தது. இதனை தொடர்ந்து கனகராஜ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை அவர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 


இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw