கோவையில் மரபெட்டி தொழிற்சாலையில் தீ! பல லட்சம் ரூ., மதிப்பிலான பொருட்கள் சேதம்

published 2 weeks ago

கோவையில் மரபெட்டி தொழிற்சாலையில் தீ! பல லட்சம் ரூ., மதிப்பிலான பொருட்கள் சேதம்

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/FePOfH8LTBKE40nzrfPpnD

கோவை: கோவையில் உள்ள மரபெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. பல லட்சம் மதிப்பிளான பொருட்கள் சேதம் அடைந்தது.

கோவை காளப்பட்டியை சேர்ந்தவர் மல்லிகா; இவர் தனது வீட்டின் அருகே மரபெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். தொழிற்சாலையில் திடீரென தீப்பிடித்து எறிந்தது.


இதை பார்த்த மல்லிகா மற்றும் அக்கம் பக்கத்தினர் பீளமேடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு, 2 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இதில் தொழிற்சாலையில் இருந்த மர சாமான்கள் உள்ளிட்ட பொருட்கள் கருகி சேதமடைந்தது. இந்த, தீ விபத்தில் ரூ. பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமாகி விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.


இதையடுத்து பீளமேடு போலீசார் வழக்கு பதிந்து, இந்த தீ விபத்து மின் கசிவு காரணமாக ஏற்பட்டதா அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.


சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw