கோவையில் மரபெட்டி தொழிற்சாலையில் தீ! பல லட்சம் ரூ., மதிப்பிலான பொருட்கள் சேதம்

published 10 months ago

கோவையில் மரபெட்டி தொழிற்சாலையில் தீ! பல லட்சம் ரூ., மதிப்பிலான பொருட்கள் சேதம்

கோவை: கோவையில் உள்ள மரபெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. பல லட்சம் மதிப்பிளான பொருட்கள் சேதம் அடைந்தது.

கோவை காளப்பட்டியை சேர்ந்தவர் மல்லிகா; இவர் தனது வீட்டின் அருகே மரபெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். தொழிற்சாலையில் திடீரென தீப்பிடித்து எறிந்தது.

இதை பார்த்த மல்லிகா மற்றும் அக்கம் பக்கத்தினர் பீளமேடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு, 2 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இதில் தொழிற்சாலையில் இருந்த மர சாமான்கள் உள்ளிட்ட பொருட்கள் கருகி சேதமடைந்தது. இந்த, தீ விபத்தில் ரூ. பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமாகி விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து பீளமேடு போலீசார் வழக்கு பதிந்து, இந்த தீ விபத்து மின் கசிவு காரணமாக ஏற்பட்டதா அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe