கோவையில் மருந்து கடையில் மாத்திரை திருடிய 2 பேர் கைது…

published 9 months ago

கோவையில் மருந்து கடையில் மாத்திரை திருடிய 2 பேர் கைது…

கோவை: கோவை பி.என் புதூரை சேர்ந்தவர் செல்வராஜ்(24). இவர் ஆர்.எஸ்.புரத்தில் மருந்து கடை நடத்தி வருகிறார். நேற்று செல்வராஜ் கடை முன்பு தனது நண்பர் ஒருவருடன் நின்று பேசிக்கொண்டிருந்தார்.

 அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் திடீரென கடைக்குள் இருந்த ஆயிரம் மதிப்பிலான மாத்திரைகளை திருடி கொண்டு தப்பிக்க முயன்றனர். உடனே சுதாரித்த செல்வராஜ் தனது நண்பருடன் சேர்ந்து 2 பேரையும் பிடித்து ஆர்.எஸ்.புரம் போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், திருட்டில் ஈடுபட்டது லாலி ரோட்டை சேர்ந்த பூமிநாதன்(26), லாலி ரோடு முனியப்பன் கோயில் தெருவை சேர்ந்த பூச்சி (எ) கிருஷ்ணன்(24) என்பது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe