கோவையில் கணவரை பிரிந்த விரக்தியில் தவறான முடிவை எடுத்த மனைவி!

published 9 months ago

கோவையில் கணவரை பிரிந்த விரக்தியில் தவறான முடிவை எடுத்த மனைவி!

கோவை: கோவையில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார்.

ஆந்திராவை சேர்ந்தவர் ஞான பிரசுனா(30).  இவரது கணவர் சிவக்குமார்(37). இவர்களுக்கு கடந்த, 9 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அவர், கணவரை பிரிந்து கோவை சிங்காநல்லுாரில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்தார்.

இதற்கிடையே வீட்டில் இருந்த ஞான பிரசுனா வாழ்க்கையில் விரக்தி அடைந்த சம்பவத்தன்று துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். சிங்காநல்லுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe