கோவையில் மொக்கை மோகன், அமுக்கமணி குண்டர் சட்டத்தில் கைது!

published 9 months ago

கோவையில் மொக்கை மோகன், அமுக்கமணி குண்டர் சட்டத்தில் கைது!

கோவை: கோவையில் தொடர் குற்ற செயலில் ஈடுபட்ட இரரண்டு இளைஞர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில்  ராமச்சந்திரன் (29) என்பவரை முன் விரோதம் காரணமாக கொலை முயற்சி செய்த குற்றத்திற்காக மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த  மோகன் குமார் என்ற மொக்கை மோகன் (19) மீது மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

அதே போல கோவை கோட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர் அடிதடி மற்றும் குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்த அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற அமுக்கை மணி என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர்.

இதனிடையே  இரண்டு பேரும் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டும், பொது அமைதிக்கும் சட்ட ஒழுங்கிற்கும் பாதகமான செயலில் ஈடுபட்டு வந்த குற்றத்திற்காக மொக்கை மோகன் மற்றும் அமுக்கை மணி ஆகியோர் மீது  குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், பரிந்துரை செய்தார்.

அப்பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் இருவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.

அவ்வுத்தரவின் அடிப்படையில் கொலை முயற்சி வழக்கு குற்றவாளிகளான இருவரையும் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.Srini

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe