நானும் ரவுதான் எனக்கூறி கோவையில் பைனான்சியரிடம் பணம் பறிப்பு!

published 9 months ago

நானும் ரவுதான் எனக்கூறி கோவையில் பைனான்சியரிடம் பணம் பறிப்பு!

கோவை: கோவையில் கத்தியை காட்டி மிரட்டி பைனான்சியரிடம் பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை துடியலூரை சேர்ந்தவர் கார்த்திகேயன்(33). பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று தனது நண்பர் ஒருவரை பார்க்க ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை வழிமறித்த வாலிபர் ஒருவர் அவரிடம் பணம் கேட்டு மிரட்டினார். அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ. 1200 ஐ பறித்து தப்பி செல்ல முயன்றார்.

கார்த்திகேயனின் சத்தம் கேட்டு அங்கு சிலர் ஓடி வந்தனர். அவர்களையும் கத்தியை காட்டி மிரட்டி ‘‘நான் இந்த ஏரியாவில் பெரிய ரவுடி’’ என கூறி அந்த வாலிபர் தப்பி சென்றார்.

இது குறித்து கார்த்திகேயன் ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் பணம் பறித்தது கோவை ரத்தினபுரி அம்பேத்கர் நகரை சேர்ந்த விக்னேஷ்(34) என்பது தெரியவந்தது.

போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe