கோவையில் நள்ளிரவில் பரபரப்பு: சுங்கம் மேம்பால சுவற்றில் சுற்றுலா வேன் மோதி விபத்து…

published 9 months ago

கோவையில் நள்ளிரவில் பரபரப்பு: சுங்கம் மேம்பால சுவற்றில் சுற்றுலா வேன் மோதி விபத்து…

கோவை: கோவை கணபதி நல்லாம்பாளையத்தை சேர்ந்த குழந்தைகள் 4 பேருக்கு அம்மை நோய் ஏற்பட்டது. இதனால் அவர்களது பெற்றோர் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு சென்று வந்தால் அம்மை குணமாகும் என்று கருதினர். 

இதனைத் தொடர்ந்து நல்லாம்பாளையத்தை சேர்ந்த உறவினர்கள் 17 பேர் வாடகை வேனில் நேற்று இரவு கோவையில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு புறப்பட்டனர். வேனை ஜெகநாதன்(30) என்பவர் ஓட்டினார். நேற்று இரவு 12.45 மணிக்கு வேன் திருச்சி ரோட்டில் உள்ள சுங்கம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த்து. அப்போது எதிர்பாராத விதமாக வேன் நிலை தடுமாறி மேம்பால சுவற்றில் மோதி நின்றது. இதனால் அதிர்ச்சியில் உறைந்து போன பயணிகள் வேனில் இருந்து இறங்கி காயமின்றி தப்பினர். 

வேன் மேம்பாலத்தில் இருந்து கவிழ்ந்து இருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். கோயிலுக்கு செல்லும் போது தடங்கல் ஏற்பட்டதால் பயணத்தை பாதியில் கைவிட்டு கோவிலுக்கு செல்வதை தவிர்த்து அனைவரும் வீட்டிற்கு திரும்பினர். இதனால் அந்த பகுதியில் நேற்று நள்ளிரவு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe