Breaking: சவுக்கு சங்கரை கைது செய்த கோவை போலீஸ்.. வரும் வழியில் கோர விபத்து..!

published 2 weeks ago

Breaking: சவுக்கு சங்கரை கைது செய்த கோவை போலீஸ்.. வரும் வழியில் கோர விபத்து..!

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/Gymsw6mPrOK0fU2lrUKwUs

கோவை: அவதூறு வழக்கில் தேனியில் வைத்து சவுக்கு சங்கரை கைது செய்த போலீசார் அவரை கோவை அழைத்து வரும் போது, போலீசாரின் வாகனம் விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

பிரபல யூட்யூபர் சவுக்கு சங்கர் பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து தேனியில் இருந்த சவுக்கு சங்கரை கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.  தொடர்ந்து அவரை போலீசாரின் வாகனத்தில் வைத்து கோவை அழைத்து வந்து கொண்டிருந்தனர்.

போலீஸ் வாகனம் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஐடிஐ கார்னர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது வாகனத்தின் மீது கார் மோதியதாக தெரிகிறது.   இதில் காவலர்கள் மற்றும் சவுக்கு சங்கர் என அனைவருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து தாராபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  

சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் அழைத்து வரப்பட்ட வாகனம் விபத்திற்குள்ளான சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 





சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw