கோவை: கோவையில் 6வது புத்தக திருவிழா கொடிசியா வளாகத்தில் இன்று முதல் துவங்கி 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதனை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்து பார்வையிட்டார். சில புத்தகங்களையும் வாங்கினார். கொடிசியா வளாகத்தில் நடைபெறும் இந்த புத்தகத் திருவிழாவில் மொத்தம் 280 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன 200க்கும் மேற்பட்ட புத்தக பதிப்பாளர்கள் புத்தகங்களை காட்சிப்படுத்தியுள்ளனர்.
மேலும் இதில் பெரியார் கலைஞர் அப்துல் கலாம் திருவள்ளுவர் ஆகியோரின் சிலைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இதில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் செந்தில் பாலாஜி, தென்னிதிய புத்தக விற்பணையாளர்கள் மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த புத்தக திருவிழா நடைபெறுகிறது என்றும் 10 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் வரும் 28ம் தேதி 5000 மாணவர்கள் கலந்துகொண்டு திருக்குறள் வாசிக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. 250000 தலைப்புகளில் புத்தகங்கள் வைக்கபட்டுள்ளதாகவும் கூறினார். 250 பதிப்பாளர்கள் கலந்துகொள்கின்றனர் எனவும் தெரிவித்தார்.
பயனுள்ள நூல்கள் இங்கு காட்சி படுத்தபட்டுள்ளன என்றும் அரசு பள்ளி மற்றும் கல்லூரியை சேர்ந்த மாணவ மாணவிகள் பார்வையிட ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தமிழக மின்வாரிய மிகவும் மோசமான நிலையில் உள்ளது கடந்த ஆட்சியில் ஏற்படுத்தபட்ட நிர்வாக சீர்கேட்டால் தான் என கூறிய அவர், 1லட்சத்து 59 ஆயிரம் கோடி அளவிற்கு கடன் சுமை உயர்த்தபட்டுள்ளதாகவும்தெரிவித்தார்.
ஆண்டிற்கு 16500 கோடி வட்டி செலுத்த கூடியளவிற்கு தமிழக மின்சார வாரியம் தள்ளபட்டுள்ளதாகவும் கூறினார். கடந்த காலத்தில் மொத்த மின் தேவையில் மூன்றில் ஒரு பங்கை மின்சார வாரியம் உற்பத்தி செய்தது மூன்றில் இரண்டு பங்கு மின்சாரம் தனியாரிடம் அதிக விலை கொடுத்து வாங்கபட்டது மின் மிகை மானிலம் என்று பொது மக்கள் மத்தியில் ஒரு தவறான பிரச்சாரம் முன் வைக்கபட்டது என தெரிவித்தார். மின் மிகை மாநிலம் என்றால் 4லட்சம் விவசாயிகள் மின் இணைப்பிற்காக 21 ஆண்டுகள் காத்திருந்தனர்? அவர்களுக்கு இனைப்பு வழங்கி இருக்கலாம் என தெரிவித்தார்.
2006 ஆண்டில் கலைஞர் ஆட்சி காலத்தில் துவக்கப்பட்ட மின் திட்டங்கள் 10 ஆண்டுகள் செயல்படுத்தபடாமல் கிடப்பில் போடபட்ட திட்டங்கள் விரைவாக முடிக்க உத்தரவிட்டு வரக்கூடிய 5 ஆண்டுகளில் 6220 மெகா வாட் கூடுதல் நிறுவு திறன் மின்வாரியத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது என தெரிவித்தார். மேலும் நிலுவையில இருந்த திட்டங்களுக்காக 12600 கோடி அளவிற்கு கூடுதலாக வட்டி மட்டும் கட்டபட்டுள்ளது என கூறினார்.
மின்சார உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ள கட்சிகள் (அதிமுக பாஜக) ) மின்கட்டண அதிகம் உள்ள கர்நாடகா , குஜராத் மாநிலங்களில் ஏன் ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை என பாஜக வை சாடினார்.
மக்களுக்காக மின்சார உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் என அறிவித்துள்ள அரசியல் கட்சி சமையல் சிலிண்டர் கியேஸ் விலை, பெட்ரோல், டீசல் விலை உயர்வை ஏன் கண்டிக்கவில்லை என கேள்வி கேட்க வேண்டும் என தெரிவித்தார்.
மின்சார கட்டணம் குறித்து எஸ்.பி.வேலுமணி பேசிய கருத்திற்கு, பதில் அளித்த அவர், அதிமுக ஆட்சியில் 2012, 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை சுமார் 37 விழுக்காடு மின்சார உயர்வை அதிமுக அரசு அறிவித்தது என்றும் 1.59 லட்சம் கோடி மின்துறை கடன் வைத்தது ஏன்? உதய் திட்டத்தில் அதிமுக அரசு ஏன் கையெழுத்திட்டது என எஸ்.பி.வேலுமணி பதில் சொல்லட்டும் என தெரிவித்தார்.
இந்த மின்சார உயர்வால் ஏழை, எளிய மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை, சமையல் கியாஸ் போல மொத்த பணத்தை பெற்று விட்டு, வங்கி கணக்கில் மானியம் வழங்கப்போவது இல்லை, மின்கட்டணத்திற்கான மானியத்தை கழித்துவிட்டு கட்டணம் செலுத்தினால் போதும் என தெரிவித்தார்.
நாளை ஆர்ப்பாட்டம் நடத்தும் கட்சி (பா.ஜ.க
கர்நாடாவிலும், குஜராதரதிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவார்களா?410 இருந்த விலை 1100 ருபாய்க்கு விற்கும் நிலையில் பொதுக்களுக்கான அதை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்துவார்களா?
திங்ககிழமை ஆர்ப்பாட்டம் நடத்தும் (அதிமுக) எதனால் ஆண்டுக்கு ஆண்டு கடன் உயர்ந்தது என்பதை சொல்வார்களா?
ஆர்ப்பாட்டம் நடத்தும் இரு கட்சிகளும்
சின்னங்கள் வேறு வேறு என்றாலும் ஓரே
இயக்கங்கள்தான் என கூறினார். கடந்த ஆட்சியில் உதய்மின் திட்டத்தில் சேர்ந்தற்கான காரணத்தை அதிமுகவினர் சொல்வார்களா? யார் நிர்பந்தம் காரணமாக உதய் திட்டத்தில் சேர்ந்தார்கள் என்பதை விளக்குவார்களா என கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாடு மின்சாரவாரியத்துக்கு கடன் கொடுக்க கூடாது என ரிசர்வ் வங்கிக்கே மத்திய அரசு தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது என கூறிய அவர், மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில் கட்டணத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். மேலும் திமுக தேர்தல் வாக்குறிதகளை படிப்படியாக நிறைவேற்றி வருகின்றது எனவும் மாதம் தோறும் மின்கட்டணம் கணக்கீடு வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொறுத்தப்பட்ட பின்பு நடைமுறைபடுத்தப்படும் என தெரிவித்தார்.