கோவையில் கல்லூரி மாணவரிடம் செல்போன், பணம் பறிப்பு பைக்கில் தப்பியவருக்கு வலை...

published 9 months ago

கோவையில் கல்லூரி மாணவரிடம் செல்போன், பணம் பறிப்பு பைக்கில் தப்பியவருக்கு வலை...

கோவை: கோவையில் கல்லூரி மாணவரிடம் செல்போன், பணம் பறித்து பைக்கில் தப்பிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை நஞ்சுண்டாபுரம் அப்துல்கலாம் தெருவை சேர்ந்தவர் பாலகார்த்திக்(21). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். 

நேற்று பாலகார்த்திக் பீளமேட்டில் உள்ள ஒரு கடைக்கு காரில் சென்றார். பின்னர் அங்கிருந்து வீடு திரும்பி கொண்டிருந்தார். அவர் நவ இந்தியா ஜங்சன் அருகே வந்தபோது, அந்த வழியாக வந்த பைக் கார் மீது உரசியது. இதில் பாலகார்த்திக்கிற்கும், பைக்கில் வந்தவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

பின்னர் அந்த நபர் அங்கிருந்து சென்று விட்டார். இதனையடுத்து காரில் முன் இருக்கையில் வைத்திருந்த பால கார்த்திக்கின் செல்போன் மற்றும் ரூ. 700ஐ காணவில்லை. பைக்கில் வந்த நபர் திருடி சென்றதாக தெரிகிறது. இது குறித்து பாலகார்த்திக் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe