கோவையில் டெலிவரி நிறுவனத்தில் 10 செல்போன்கள் திருட்டு ஊழியர் கைவரிசை…

published 8 months ago

கோவையில் டெலிவரி நிறுவனத்தில் 10 செல்போன்கள் திருட்டு ஊழியர் கைவரிசை…

கோவை: கோவையில் தனியார் டெலிவரி நிறுவனத்தில் 10 செல்போன்களை திருடிய ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை சரவணம்பட்டி - சத்தி மெயின் ரோட்டில் தனியார் டெலிவரி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. 

இங்கு ஆன்லைனில் ஆர்டர் செய்யப்படும் பொருட்கள் கொண்டு வரப்பட்டு டெலிவரி செய்யப்படுகிறது. இந்த நிறுவனத்தில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கோவையை சேர்ந்த பழனிசாமி என்பவர் ஊழியராக வேலைக்கு சேர்ந்தார். 

அவர் வேலைக்கு சேர்ந்த சில நாட்களிலேயே வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்ய வைத்திருந்த ரூ. 2.45 லட்சம் மதிப்பிலான 10 செல்போன்களை திருடி விட்டு வேலைக்கு வரவில்லை. இது குறித்து நிறுவனத்தின் டீம் லீடர் சரவணன்(30), சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe