கோவையில் மண்ணெண்ணெய் ஊற்றி குழந்தையை கொழுத்தி விடுவதாக மிரட்டல்- தொழிலாளி கைது...

published 8 months ago

கோவையில் மண்ணெண்ணெய் ஊற்றி குழந்தையை கொழுத்தி விடுவதாக மிரட்டல்- தொழிலாளி கைது...

கோவை: கோவையில் மனைவி கோபித்து சென்றதால் மண்ணெண்ணெய் ஊற்றி குழந்தையை எரித்து விடுவதாக மிரட்டல் விடுத்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
 

கோவை சாயிபாபா காலனி அண்ணா நகரில் வசிப்பவர் பச்சையன்(39). கூலி தொழிலாளி. இவரது மனைவி ஆர்த்தி. இந்த தம்பதிகளுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில், பச்சையன் அடிக்கடி குடித்து விட்டு போதையில் தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதேபோல், சில தினங்களுக்கு முன்பு கணவன், மனைவி இடையே சண்டை ஏற்பட்டது. 

இதனால் கோபித்து கொண்டு ஆர்த்தி மதுரையில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். குழந்தையை அழைத்து செல்லவில்லை. இதனையடுத்து நேற்று பச்சையன் தனது மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டு கோவைக்கு வருமாறு அழைத்தார். அதற்கு அவர் மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பச்சையன், நீ வரவில்லை என்றால் குழந்தையை உயிரோடு மண்ணெண்ணெய் ஊற்றி கொழுத்தி விடுவேன் என மிரட்டல் விடுத்தார். 

இதனால் பயந்து போன ஆர்த்தி, சாயிபாபா காலனியில் வசிக்கும் தனது பெரியம்மாவிடம் விவரத்தை கூறி நேரில் செல்லுமாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து ஆர்த்தியின் பெரியம்மா பொன்னி(50) சிலரை அழைத்து கொண்டு பச்சையன் வீட்டுக்கு சென்று அவரிடம் இருந்த குழந்தையை மீட்டனர். இது குறித்து பொன்னி சாயிபாபா காலனி போலீசில் புகார் அளித்தார். 

புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பச்சையனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe