கோவையில் பெண்ணை தாக்கிய வாலிபர் கைது…

published 8 months ago

கோவையில் பெண்ணை தாக்கிய வாலிபர் கைது…

கோவை: கோவை குளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் வடிவேலு. இவரது மனைவி சுகுணா(37). வடிவேலுவும், அதே பகுதியை சேர்ந்த பெயிண்டர் ராஜா(40) என்பவரும் நண்பர்களாக பழகி வந்தனர். 

இந்நிலையில், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று சுகுணா தனது மகளுடன் ராஜா வீட்டருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ராஜா தகாத வார்த்தைகளால் பேசி சுகுணாவை தாக்கி மிரட்டல் விடுத்தார். 

இது குறித்து சுகுணா குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe